செவ்வாய், 17 நவம்பர், 2015

டைவர்ஸ்க்கு காரணம் ஜோதிடரா?- அதனால் எனக்கு டைவர்ஸ் வேண்டும்

டைவர்ஸ்க்கு காரணம் ஜோதிடரா?
ஜோசியர்கிட்ட ஜாதகம் கொடுத்ததும்,எங்களுக்கெல்லாம் ரொம்ப பிடிச்சு போச்சுங்க..பொண்ணுக்கும்,மாப்பிள்ளைக்கும் அதை விட புடிச்சு போச்சி..உங்கக்கிட்ட எதுக்கும் ஒரு வார்த்தை கேட்டுவிட்டு போலாம்னுதான் வந்தோம் என நெருக்கடி கொடுத்தா எந்த  ஜோசியரும் என்ன செய்வார்..? ஓரளவுக்கு பொருத்தம் வந்தா சரி.அதான் நட்சத்திர பொருத்தம் இருக்கே..செவ்வாய் தோசமும் பொருந்துது..நாகதோசமும் பொருந்துது என்றுதான் சப்பைக்கட்டு கட்டுவார்.

பொண்ணும் பையனும் பெரிய வேலையில இருக்காங்க..இரண்டு பக்கமும் கோடிக்கணக்குல சொத்து இருக்கு...நட்சத்திர பொருத்தமும் 7 பொருத்தம் இருக்கு..அதைவிட என்ன வேணும்..?  அப்படின்ன சிலபேர் நினைக்குறாங்க!

பையன் ஜாதகத்துல 7 ஆம் அதிபதி கிரகம் எந்த கிரகத்துடன் சேர்ந்து இருக்கு..பொண்ணு ஜாதகத்துலியும் 7 ஆம் அதிபதி என்ன ஆனார்ன்னு பார்க்கணும்..பொண்ணு ஜாதகத்துல 7 ஆம் அதிபதி கேதுவுடன் சேர்ந்தாலோ,6,8,12 ல் மறைந்தாலோ,6,8,12க்குடையவன் 7ல் இருந்தாலோ பிரிவு நிச்சயம்...இவனுக்கும் எனக்கும் ஒத்தே வராதுன்னு பொண்ணு சொல்லிடும்..இவ மூஞ்சியில இனி முழிக்கவே மாட்டேன்னு பையன் சொல்லிடுவான்..  அதுமாதிரிதாங்க ஒரு பொண்ணும் ஒரு பையைனை எதிர்த்து பயங்கரமா பிரச்சனை பண்ணினாங்க! அது பற்றிய விவரம் கீழே!


ஒருவர் ஜாதகம் பார்க்க வந்திருந்தார்அவர்மனைவியோடு தினமும் பிரச்சினையாம்..நிம்மதியே இல்லையாம்..டைவர்ஸ் பண்ணிடலாமா என ஜாதகம் பார்த்து சொல்லுங்க என்றார்.  ஜாதகம் பார்த்தால் அதில் அவருக்கு லக்னத்துக்கு 3ஆம் அதிபதி கெட்டு அவரை சனியும் பார்த்து 3ஆம் அதிபதி நின்ற வீட்டுக்கதியும் மறைந்திருக்கிறார் லக்னத்துக்கு 3ஆம் இடம் தான் வீரியம்,ஆண்மை பற்றி சொல்லும் இடம்..சுக்கிரனை பார்த்தால் அவரும் கெட்டு விட்டார் 7ஆம் அதிபதியும் கெட்டுட்டார்..ஆக இந்த ஜாதருக்குத்தான் ஆண்மை இல்லை..பாவம் அந்த பெண் எவ்வளவு காலம் பொறுப்பார்.. அதான் பிரச்சனைகள் வெடிக்கின்றன. இதற்கு சரியான தீர்வு உங்களுக்கு தெரியாததா என்ன?

அடுத்து ஒரு பெண்ணின் பிரச்சனை பார்ப்போம்!
ஆலோசனை கேட்கும் பெண்ணின் பரிதாப நிலை!
எனக்கு வயது 30. நான் பிளஸ்2, டைப்பிங் முடித்துள்ளேன். என் கணவருக்கு வயது 38. அரசு வேலை. எங்களுக்கு திருமணம் முடிந்து ஆறு வருடம் ஆகிறது. ஒரே பையன் இரண்டாம் வகுப்பு படிக்கிறான். அதிபுத்திசாலி. அப்பா - அம்மா மீது மிகுந்த பாசத்துடன் இருப்பான்.
என் கணவருக்கு தூரத்து சொந்தமான அக்காவுக்கு திருமணம் ஆகி, 10 வருடங்கள் ஆகின்றன. அவருடைய கணவருக்கு வேலை இல்லை. இரண்டு மகளும், ஒரு மகனும் இருக்கின்றனர். என் கணவர் திருமணத்திற்கு முன்பிருந்தே அக்காவின் குடும்பத்துக்கும் பண உதவி செய்துள்ளார்.
திருமணம் முடிந்த பிறகும் உதவி செய்தார். நானும் இது பற்றி எதுவும் கேட்பதில்லை. என் மீதும், என் குழந்தை மீதும் பிரியமாக இருந்ததால், திருமணத்திற்கு பிறகு பண உதவி குறைந்தது. இதனால், ஆத்திரமடைந்த அவர் அக்கா, என்னை அவரிடம் இருந்து பிரிக்க திட்டமிட்டார். எங்களுடனேயே அவருடைய குடும்பத்தையும் இணைத்து, ஒரே குடும்பமாக இருப்போம் என்று நயவஞ்சகமாக பேசி உள்ளே நுழைந்து விட்டார்.
என்னுடைய பிறந்த வீடு ஏழ்மையில் இருந்தது. அங்கு இருந்து எந்த உதவியும் எனக்கு இல்லை. இதை பெரிதுபடுத்தாத என் கணவரிடம், இல்லாததையும், பொல்லாததையும் கதை கட்டிவிட்டு, என்னிடம் சண்டை போடச் சொல்வார். நானும் பதிலுக்கு, "உங்கள் அக்காவின் பேச்சைக் கேட்டு என்னிடம் சண்டை போடாதீர்கள்...' என்று பேசுவேன். இப்படியாக சிறு சிறு சண்டை வந்து, அடி, உதை என்று என் உடம்பில் காயம்படும்படி சண்டை வலுத்தது.
என் பிள்ளை மேல் பாசமாக இருப்பது போல் நடித்து, "பாருடி... ஒரு நாளாவது என் பிள்ளைக்கு இப்படி சோறு போட்டிருப்பியா?' என்று பிள்ளைப் பாசத்தையும் சந்தேகப்பட வைத்தார். என்னிடம் பேசுவதையே நிறுத்தி விட்டார் என் கணவர். சாப்பாடு கூட அவருடைய அக்காதான் போடுவார். என் மேல் வெறுப்பு அதிகமானது. நான் நடைப்பிணமானேன். வெளியில் யாருடனும் பேசக் கூடாது. வீட்டு வேலைகளை செய்ய வேண்டும். என்னிடம் வரும்போது நான் கொஞ்சி மகிழ வேண்டும். மற்ற நேரங்களில் அவர்களோடுதான் இருக்க வேண்டும்.
நான் ஏதாவது எதிர்த்து பேசினால், "உன் அப்பன் வீட்டிலிருந்து அரிசி, பருப்பு வாங்கி வா...' என்றும், "10 ஆயிரம் ரூபாய் வாங்கி வா...' என்றும் அடித்து கொடுமைப்படுத்துவார். நான் ஒரு அடிமையாக இருக்க வேண்டும் என்கின்றனர். என் கணவர் பேசும் வார்த்தைகளை காது கொடுத்து கேட்க முடியாது. அவ்வளவு அசிங்கமாக பேசுகிறார். அவர் அக்காவுக்கு இப்பொழுது சந்தோஷம் தாங்கவில்லை. மகிழ்ச்சியாக இருக்கிறார்.
"என்னை விவாகரத்துசெய்து விடுங்கள். எதற்கு இப்படி கொடுமைப்படுத்துகிறீர்கள்?' என்று கேட்டால், "நான் உன்னை கட்டிப் போட்டா இருக்கேன், நீயாக என்னை விவாகரத்து செய்து ஓடி போ...' என்று அடிக்கிறார்.
இந்த பிரச்னையிலிருந்து மீள எனக்கு வழி சொல்லுங்கள். போலீசுக்கு போகலாம் என்றால், எனக்கு எந்த உதவியும் கிடையாது. ஆள் பலமோ, பண பலமோ கிடையாது. என் கணவர் வீட்டில் ஆள் பலம் அதிகம். என்னுடைய இந்த பிரச்னைக்கு வழி சொல்லுங்கள்!


இப்படி திருமணத்தில் பிரச்சனை வராமல் இருக்க வேண்டும் என்றால் திருமணப் பொருத்தம் பார்த்துதான் ஜாதக பொருத்தம் பார்த்துத்தான் கல்யாணம் செ்யதிருக்க வேண்டும்

திருமண பொருத்தமா? பணப் பொருத்தமா?  மன பொரு்தமா அல்லது நல்ல குண பொருத்தமா! மாங்கல்ய பொருத்தமா? நட்சத்திர பொருத்தமா எது முக்கியம்!
திருமண பொருத்தம் ஒரே நிமிடத்தில்! - ஜோதிடம் ராசிபலன் திருமண பொருத்தம் பற்றிய தகவல்கள் கொண்ட இணையதளம்

திருமண பொருத்தம்,தின,கண,மகேந்திர,ஸதிரீதீர்க்க,யோனி,ராசி,வசிய,ரச்சு, வேதை, பொருத்தம் 

திருமண பொருத்தம் அட்டவணை

இலவச திருமண பொருத்தம் மென்னூல் கிடைக்கும் சுட்டி

சித்தர் முறை ஜோதிடம்


அக்காலத்தில் திருமணத்திற்கு 16 பொருத்தங்கள் பார்பது வழக்கத்தில் இருந்தது. இதைத்தான் அக்காலத்தில் பதினாறு பெற்று பெறுவாழ்வு வாழு என்று சொல்வார்கள். நாளடைவில் அதை சுருக்கி 10 பொருத்தங்கள் பார்த்தால் போதும் என்று முடிவு செய்தார்கள். இன்று இன்னும் சுருக்கி 7 6 5 பொருத்தங்கள் இருந்தால் போதும் என்று அவரவர்களாகவே முடிவு செய்து கொண்டார்கள். அதன் விளைவுகளை நாம் நிறைய இடங்களில் பார்க்கலாம். அதனால் இந்த திருமண பொருத்தங்களை பற்றி சில தத்துவங்களை மக்களுக்கு விளக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இதை ஆராய்ந்து இங்கே வெளியிட்டுள்ளோம். நிகழ்காலத்தில் பார்க்கும் திருமண பொருத்தம் 10 தான் நடைமுறையில் உள்ளது.


சித்தர் முறைப்படி திருமணத்திற்கு சில குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன

அதன்படி எந்த ராசியில் பிறந்தவர்களுக்கு எந்த ராசிகாரர்கள் வாழ்க்கை துணையாக அமைய வேண்டும் என்பதை குறிப்பிட்டுள்ளோம். மேச லக்கன சாதகத்தில் பிறந்தவர்களுக்கு கடக லக்கனம் கடகராசிக்காரர்கள் துணையாக அமைவது சிறப்பு .
ரிசிப லக்கன ராசிகாரர்களுக்கு கன்னி மகரம் லக்கனம் ராசி அமைவது சிறப்பு.
மிதுன லக்கன ராசிகாரர்களுக்கு துலாம் மகர லக்கனம் ராசி அமைவது சிறப்பு.
கடக லக்கனம் ராசிக்கு விருச்சகம் மீனம் லக்கனம் துணையாக அமைவது சிறப்பு
சிம்ம லக்கன ராசிக்கு விருச்சகம் மேச ராசி லக்கன துணைஅமைவது சிறப்பு
கன்னி லக்கனம் ராசிக்கு துலாம் மகரம் துணை அமைவது சிறப்பு
துலாம் லக்கனம் ராசிக்கு சிம்மம் மீனம் ராசி அமைவது சிறப்பு.
விருச்சக லக்கனம் ராசிக்கு சிம்மம் மீனம் ராசி அமைவது சிறப்பு
தனுஷ் லக்கனம் ராசிகாரர்களுக்கு மேசம் சிம்மம் ராசிகாரர்கள் துணை சிறப்பு.
மகர லக்கனம் ராசிக்கு ரிசிபம் கன்னிராசி துணை சிறந்தது.
கும்ப லக்கன ராசிக்கு ரிசிபம் கன்னிராசி துணை சிறந்தது.
மீனம் லக்கனம் ராசிக்கு கடகம் விருச்சகராசி துணை சிறப்பு.

 நாகதோசம்என்பது லக்னத்தில் ராகு இருந்தாலும் கேது இருந்தாலும் குடும்ப ஸ்தானம் எனப்படும் லக்னத்துக்கு இரண்டாம் இடத்தில் ராகு இருந்தாலும் கேது இருந்தாலும் நாகதோசம் எனப்படும்..இப்படி இருப்பவர்கள் முன்கோபம்,பிடிவாதம்,அலட்சியம், சந்தேக குணம் ,பெரியோர்களுக்கு கீழ்படியாத குனம் கொண்டவர்கள்...இவர்கலை கண்ட்ரோல் செய்ய இன்னொரு நாகதோசம் கொண்டவர்களால் தான் முடியும் அதனால்தான் நாகதொசம் இருப்பவர்களுக்கு அதே போல் இருப்பவர்கலையே சேர்க்க வேண்டும் இல்லையே முறையற்ற தொடர்புகள் பின்னாட்களில் உண்டாகி பிரிவை தரும்.......சண்டையும் ஓயாது...

செவ்வாய் தோசம்
8ல் இருப்பவர்களுக்கு இரண்டில் செவ்வாய் இருப்பவர்களை சேர்க்க வேண்டாம்..ஒருவர் பேசுவதே கொடூரமாக இருக்கும் இன்னொருவரும் அப்படிஇருந்தால் வீடு தாங்காது...குருவோடு அல்லது சுக்கிரனுடன் செவ்வாய் இருந்தால் அது பரிகார செவ்வாய்..அவர்களுக்கு செவ்வாய் தோசம் இல்லாதவர்களை கூட திருமணம் செய்து வைக்கலாம்..

தமிழ் நடிக நடிகையரின் டைவர்ஸ்...

ஊர்வசி
பிரசாந்த்
மோகினி
சொர்ணமால்யா
சுகன்யா-ஸ்ரீதர்
பாபிலோனா
டான்ஸ் மாஸ்டர் கலா- ஆர்.கோவிந்தராஜன் (சிநேகாவின் அண்ணன்)
சுலக்ஷனா - எம்.எஸ்.வி.கோபி
ரேவதி - சுரேஷ்மேனன்
கவுதமி
ராமராஜன் - நளினி
சீதா - பார்த்திபன்
கமல்ஹாசன் (இருமுறை)- வாணிஸ்ரீ, சரிகா
சரண்யா - ராபர்ட்
டாக்டர் ஷர்மிளா - ஏ.எல்.என்.மோகன்
ஸ்ரீவித்யா - ஜார்ஜ்
அம்பிகா- (ஒருமுறை)
ராதிகா - (இருமுறை)
சரத்குமார் - சாயா
விஜயகுமாரி - எஸ்.எஸ்.ராஜேந்திரன்
லட்சுமி - (மூன்று முறை)
ஐஸ்வர்யா (ஒரு முறை)
சுஜாதா
சரிதா-முகேஷ்


சில நாடுகளில் எதற்கெடுத்தாலும் டைவர்ஸ் கேட்கிறார்களாம்
இங்கிலாந்து நீதி மன்றங்களில் தொடரப்படும் மணவிலக்கு வழக்குகளில் சில காரணங்கள்!
...... எனவே எனக்கு மணவிலக்கு வேண்டும்!
அதனால் எனக்கு டைவர்ஸ் வேண்டும்
பெண்:என் கணவர் என்னை எப்போதும் நாட்டுப்புறப்பாணியில் சேலை கட்டிக் கொண்டு, அதே மாதிரிப் பேச வேண்டும் என்கிறார்.எனவே எனக்கு விவாக ரத்து வேண்டும்! அதனால் எனக்கு டைவர்ஸ் வேண்டும்

ஆண்:எனக்குக் கருவாடு பிடிக்காது என்று தெரிந்தும் என் மனைவி தினம் கருவாடே சமைக்கிறாள்.எனவே எனக்கு விவாகரத்து வேண்டும்...அதனால் எனக்கு டைவர்ஸ் வேண்டும்

ஆண்:என் மனைவி அடிக்கடி டி.வி மொபைலை ஒளித்து வைத்து விடுகிறாள்;அல்லது,டி.வி.யில் ஏதாவது கோளாறுசெய்து வைத்து விடுகிறாள்!எனவே...............அதனால் எனக்கு டைவர்ஸ் வேண்டும்

பெண்:என் கணவர் என்னுடன் பத்து ஆண்டுகளாகப் பேசுவதே இல்லை.எல்லாமே எழுத்து மூலமாகத்தான்!எனவே...........................

(அது மாதிரியென்றால் என் தாத்தா,பாட்டி-அம்மாவின் பெற்றோர்- எப்போதோ டிவோர்ஸ் செய்திருக்க வேண்டும்!அவர்கள் வாழ்நாள் முழுதும் பேசிக் கொண்டதே கிடையாது;ஆனால்  ஆறேழு குழந்தைகள் பெற்றார்கள்!)

ஆண்:என் மனைவி எல்லா ஆண்களையும் தொட்டுத்தொட்டுப் பேசுகிறாள். தன்னால் அதைத் தவிர்க்க இயலவில்லை என்று சொல்கிறாள். எனவே................

பெண்:அவர் வளர்க்கும் தேரையை ஒரு பெட்டியில் வைத்து எங்கள் படுக்கையிலேயே வைத்துக் கொண்டு  படுக்க வேண்டும் எனச் சொல்கிறார். எனவே................... அதனால் எனக்கு டைவர்ஸ் வேண்டும்

பெண்:தொலைகாட்சி பார்க்கும்போது என் கணவர் சேனல்களை மாற்றிக் கொண்டே இருக்கிறார்!எனவே...............

பெண்:’என் கணவரின் உடல் நாற்றம் தாங்கவில்லை.எனவே........

பெண்/ஆண்: என் கணவன்/மனைவி தினம் அது வேண்டுமென்று கட்டாயப் படுத்துகிறார்/ள்!எனவே.................

இவையெல்லாம் இங்கிலாந்து நீதி மன்றங்களில் தொடரப்படும் மணவிலக்கு வழக்குகளில் சில காரணங்கள்!(கொஞ்சம் மாற்றங்களுடன்)

இந்தியா பரவாயில்லை!இது  இன்னும் இங்கு பரவவில்லை!!

நன்றி: இந்தியாவின் நேரங்கள்-11-04-12

லவ்வர்ஸ் டே  எங்கே செல்லும் இந்த பாதை..?  lovers day

லவ்வர்ஸ் டே....வெளிநாட்டு கலாச்சாரம்..அதிகளவில் அது சார்ந்த பொருட்களை விற்பனை செய்ய சந்தைபடுத்தும் ஒரு யுக்தி..இது இப்போதும் இந்தியாவிலும், தமிழகத்திலும் அதிகளவில் தாக்கத்தை உண்டாக்கி இருக்கிறது சின்னப்பொண்ணுங்க..சின்னப்பசங்களுக்கு லவ்வர்ஸ் டே என்றால் என்னன்னு தெரிஞ்சிக்கும் ஆர்வமும்...தனக்கும் ஒரு பாய்ஃப்ரெண்ட், கேர்ள்ஃப்ரெண்ட் வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்கும் தினமாக மாறிக்கொண்டிருக்கிறது..8 ஆம் வகுப்பு,10அம் வகுப்பு பசங்க பொண்ணுங்க கூட அவசரமாக ஒரு காதலை இதை கொண்டாடுவதற்காகவே உருவாக்கும் நிலையும் இன்று இருக்கிறது.

மீடியாக்கள் கலர் கலரா கதறி காதலன் காதலி இல்லாவிட்டால் வேஸ்ட் என கிண்டல் செய்யும் நிலைக்கு போய்க்கொண்டிருக்கிறது இதெல்லாம் நல்லதுக்குன்னா நினைக்கிறீங்க..? பெண்களுக்கு இப்ப நல்ல சுதந்திரம் இருக்கு ..காலேஜ் போற பொண்ணுங்க இப்ப ஆண்ட்ராய்ட் வசதி கொண்ட ஃபோன் எல்லாம் வெச்சிருக்காங்க..அப்பன் அம்மா சிறு சிறுக சம்பாதிச்சு கஷ்டப்படப்பட்டு பொண்ணு கல்யாணத்துக்கு நகை சேர்த்துக்கிட்டு இருப்பாங்க.. சில பேரண்ட்ஸ் நல்ல சாப்பாடு கூட இல்லாம பொண்ணுக்கு சீர் செய்யனும்னு அந்த காசையும் சேர்த்து வைப்பாங்க எதிர் காலத்துக்காக..அவங்களுக்கு தெரியுமா..லவ்வர்ஸ் டே தன் பொண்ணும் கொண்டாடும்னு..?

ஆனா சிலபொண்ணுங்க காதலன் இல்லைன்னா தோழிகள் மத்தியில கேவலமா போயிடுமே என்பதற்காகவே லவ் பண்ணி லவ்வருக்கு கொடுக்க,லவ்வர்ஸ் டே க்கு கடை கடையா ஏறி கிஃப்ட் வாங்கி பெருமையா காட்டிக்குறாங்க..சில பசங்க இல்ல பெரும்பாலான பசங்க...படிப்பை மறந்து தொழிலை மறந்து நல்ல பொண்ணுங்களையும் தொந்தரவு செஞ்சு லவ் பண்ண வெச்சி ...அவங்க லட்சியத்தையும் மறக்கடிச்சு இவங்களுக்கும் லட்சியம் இல்லாம காதல் ஒண்ணே வாழ்க்கைன்னு இருக்காங்க..வெள்ளைக்காரன் எல்லா நாளுக்கும் டே உண்டாக்குறான்..எதுக்கு பிசினஸ் மைண்ட் தான்..ஊதா கலர் ரிப்பன் என சினிமா ஒரு பக்கம் நம் மக்கள் மனதை குப்பையாக்க இந்த லவ்வர்ஸ் டே இன்னும் பெரிய குப்பையை பிஞ்சுகள் மனசுல அள்ளிப்போடுது!!

ஊதா... ஊதா...

ஊதா கலரு ரிப்பன் உனக்கு யாரு அப்பன்
ஊதா கலரு ரிப்பன் உனக்கு யாரு அப்பன் ( இசை)

ஊதா கலரு ரிப்பன் உனக்கு யாரு அப்பன்
ஏ சொல்லடி அவனுக்கு நான் சலாம் போடணும்
நீ சொல்லடி அவனுக்கு நான் சலாம் போடணும்

ரோஜா... ரோஜா...

ரோஜா கலரு பொம்மி உனக்கு யாரு மம்மி
ரோஜா கலரு பொம்மி உனக்கு யாரு மம்மி
ஹே நில்லடி அவளுக்கு நான் சபாஷ் போடணும்
நீ நில்லடி அவளுக்கு நான் சபாஷ் போடணும்

ஊதா... ஊதா...

              
மத்தவங்க நடந்து போனா
வீதி வெறும் வீதி
 நீ தெருவில் நடந்து போனா எனக்கு
 சேதி தலைப்பு சேதி
மத்தவங்க சிரிப்ப பாத்தா
ஓகே வெறும் ஓகே
நீ சிரிச்சு பேசும் போது எனக்கு
வந்திடுதே சீக்கே
மத்தவங்க அழகு எல்லாம்
மொத்ததுல போரு போரு
சிங்காரி ஓன் அழகு தானே
போத ஏத்தும் பீரு பீரு
கிங்கு ஃபிஷர் பீரு

ஊதா... ஊதா... 

ஆ... மத்தவங்க ஒரசி போனா
 ஜாலி செம ஜாலி
 நீ ஒரசி போன பிறகு பாத்தா
காலி ஐ ஆம் காலி
மத்தவங்க கடந்து போனா
தூசி வெறும் தூசி
 நீ கடந்து போன பிறகும் குளிரு
ஏசி விண்டோ ஏசி
மத்தவங்க கண்ணுக்கெல்லாம்
சீமாட்டி நீ சேட்ட சேட்ட
என்னுடைய கண்ணுக்கு நீ
எப்பவுமே காதல் கோட்ட
நிப்பாட்டுறேன் பாட்ட...

ஊதா... ஊதா...

ஊதா கலரு ரிப்பன் உனக்கு யாரு அப்பன்
ஊதா கலரு ரிப்பன் உனக்கு யாரு அப்பன்
நீ சொல்லடி அவனுக்கு நான் சலாம் போடணும்
நீ சொல்லடி அவனுக்கு நான் சலாம் போடணும்

 ஊதா... ஊதா... ஊதா...